தரமற்று இருந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை - தூத்துக்குடி கலெக்டருக்கு முன்னாள் உபதலைவர் நன்றி
தரமற்ற நிலையில் அமைந்த நூறுநாள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் ஊராட்சி உபதலைவர் நன்றி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் கடந்த ஆண்டு நூறுநாள் திட்டத்தில் புதுமனை சாலை சுமார் ரூ 6 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.மேற்படி சாலை அமைக்கும் போது தரமான நிலையில் அமைக்காமல் பள்ளமும் மேடும் மற்றும் ஜல்லி தெரியும் அளவிற்கு அமைக்கப்பட்டிருந்தது.சாலை அமைக்கும் போது தரமற்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த தெரு மக்களிடையே பலத்த எதிர்ப்பு நிலவியது.அப்போது ஊராட்சி உபதலைவராய் இருந்த ஏஞ்சலின் ஜெனிட்டா கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.இந்நிலையில் இந்த ஆண்டு சாலை அமைத்த பொருட்களுக்காக பணம் வழங்க ஒப்புதல் வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த சாலை மழை நீர் தேங்கி மக்கள் நடந்து செல்லமுடியாத சூழ்நிலையில் மேற்கண்ட இடத்தில் வெறும் மணலில் சிமெண்ட் கொட்டி சாலை அமைக்க பட்டதால் அந்த இடத்தில் அருகில் உள்ள ஜல்லியை கொட்டி மக்கள் பயணம் செய்தனர்.கடந்த மாதம் முதலமைச்சர் தனிபிரிவிற்கும் மேலும் ஊரக உள்ளாட்சித்துறை நிர்வாகத்திற்கும் மனு அளித்தார்.
இந்நிலையில் யார் சாலை அமைத்து தரமற்ற சாலைக்கு பணம் வழங்க ஒப்புதல் அளித்தார்களோ மேற்படி நபர்களே சாலை தரமாக உள்ளது என பதில் அளித்து தொடர்ந்து மக்கள் கோரிக்கையை அவமதித்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கவனம் கொண்டு சென்று திரும்பவும் மேல்முறையீடு மனு ஏஞ்சலின் ஜெனிட்டா சார்பிலும் மனு அளிக்கபட்டு பத்திரிக்கை செய்தியும் வெளிவந்தது.இந்நிலையில் மேற்கண்ட சாலையை சரி செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் மேற்கண்ட சாலை சீரமைக்கபட்டு தற்போது நிர்வாகத்தால் புகைப்படத்துடன் கூடிய பதில் அனுப்பபட்டுள்ளது.மேற்படி மக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கும் ஊரக உள்ளாட்சி கூடுதல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் புதுமனை பொதுமக்கள் சார்பில் ஏஞ்சலின் ஜெனிட்டா நன்றி தெரிவித்துள்ளார்.மேற்படி அவர் கூறுகையில் " எம் ஊராட்சியில் நூறுநாள் திட்ட சாலை கடந்த நாட்களில் இரண்டே சாலைகள் அமைக்கப்பட்டது.அதில் ஒன்று ஒடக்கரை சாலை ஆகும்.இந்த சாலையும் தெரு முனை பகுதி முதல் நடுப்பகுதி வரை ஜல்லி தெரியும் நிலையிலும் முறைகேடாக விளம்பர பலகையை சுவற்றில் எழுதி கணக்கு காண்பிக்கப்பட்டது.மனு அளித்தேன் சுவற்றில் உள்ள தகவல் அழிக்கப்பட்டு தற்போது முறையாக விளம்பர சுவர் கட்டப்பட்டு எழுதப்பட்டுள்ளது.
சாலை சரிசெய்ய படவில்லை.அதை விட மோசமாக மேற்படி புதுமனை சாலை அமைக்க பட்டதால் தொடர்ந்து மக்கள் சார்பாக போராடி இன்று மாவட்ட ஆட்சியர் நடவடிக்கையின் பேரில் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.எனது ஊராட்சி மக்களின் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு பணிவாண வேண்டுகோள் 1) 10 இலட்சம் செலவில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கடந்த 2020 இல் அமைக்கபட்டு இன்று வரை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் பழுது ஏற்பட்டுள்ளதாக பொய்தகவல் அழித்து 26/5/2025 அன்று இரண்டு நாட்களுக்குள் திறக்கப்படும் என்ற தங்கம்மாள் புரம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து தரவேண்டும் 2)2019 இல் ஆணை பெறப்பட்டு இது வரை சாலை அமைக்க படாமல் சுமார் 30,912 முறைகேடாக பணம் அளிக்கப்பட்டு தற்போது சாலை அமைக்காமல் சுமார் இரண்டு லட்சம் ஒப்புதல் பில் வைக்கப்பட்டதை ஆராய்ந்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
3) வீடு இல்லாத மற்றும் தனியார் கல்லறை தோட்டத்திற்கு முறைகேடாக 29/5/2025 அன்று பைப் லைன் சக்கம்மாள்புரம் குடிநீர் தொட்டியில் இருந்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது.அதை அகற்றி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.அதே ஊரில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு பலமுறை மனு அளித்த நடவடிக்கை எடுக்காமல் உள்ள மருதாணிக்குட்டம் சட்டர் சரி செய்ய வேண்டும் .செந்தியம்பலம் நல்லமலை ஆற்று நீர் ஒருமாதம் வரவில்லை அதனை சரிசெய்து மக்களுக்கு அளிக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
கருத்துக்கள்