பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனி வழிபாடு
செப். 20, 2025 3:24 முற்பகல் |
பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, சத்தியநாராயணா அலங்காரத்தை திரளான பக்தர்கள் தரிசனம செய்தனர்.
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, காலையில் கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சத்தியநாராயணா அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இன்று முதல் சனிக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்க பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ப கோவில் பிரதான பட்டர் வைகுண்ட ராமன் பூஜைகளை நடத்தினார்.
கருத்துக்கள்