advertisement

தூத்துக்குடியில் 3 ரவுடிகள் குண்டாசில் கைது

செப். 04, 2026 6:07 முற்பகல் |

 

தூத்துக்குடியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவித்து வந்த வரலாற்றுப் பதிவேடு ரவுடிகளான 3 நபர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நியூ முனியசாமிபுரம், தாளமுத்துநகர் மாரிமுத்து மகன் ஜீவா (20), அம்பேத்கர் நகர் 1-வது தெரு, சேகர் மகன் சந்திரன் (23), அம்பேத்கர் நகர் சந்தனராஜ் என்ற பம்பு (25) ஆகிய 3பேரையும் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் தனசேகரன் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement