அமெரிக்காவில் அரசு அதிகாரி போல் நடித்து மோசடி செய்தவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை
அரசு அதிகாரி போல் நடித்து முதியோர்களிடம் இருந்து ரூ.17 கோடி வரை மோசடி செய்துள்ள வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு 06 ஆண்டு சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்த பிரணவ் படேல். வயது 33. இந்திய வம்சாவளியான இவர், கால் சென்டர்கள் மூலம் முதியோர்களை குறி வைத்து மிரட்டி, பணம் மற்றும் நகைகளை பறித்து வந்துள்ளார்.
அதாவது, அந்நாட்டின் கருவூலத்துறை அல்லது அரசின் பிற ஏஜன்சிகளைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு, முதியோர்களை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அவர்களிடம், 'உங்கள் மீது குற்ற நடவடிக்கைக்காக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யாமல் இருக்க உங்களிடம் உள்ள பணம் மற்றும் நகைகளை எங்களிடம் விசாரணைக்கு கொடுக்க வேண்டும்,' என்று கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இவ்வாறு முதியவர் ஒரு வீட்டில் நகை பெட்டியை பெறுவதற்காக சென்ற போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பண மோசடி மற்றும் பணத்தை சட்டவிரோதமாக கைமாற்றுதல் போன்ற குற்றங்களுக்காக பிரணவ் படேல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில், பிரணவ் படேலுக்கு 06 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கருத்துக்கள்