advertisement

மகாராஷ்டிரா : இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்த தந்தை!

அக். 25, 2025 5:04 பிற்பகல் |

 

மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு கொடூரச் சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. ராகுல் சவான் என்ற நபர் தனது மனைவியுடன் மற்றும் இரட்டை பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். குழந்தைகளுக்கு வயது இரண்டு மட்டுமே.

சம்பவம் நடந்த நாள், ராகுல் சவான் குடும்பத்துடன் வேறு இடத்திற்குப் பயணம் மேற்கொண்டார். பயணத்தின் போது அவருக்கும் மனைவிக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டது. கோபத்தில் மனைவி வாகனத்திலிருந்து இறங்கி தன் தாயின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதனால் மனஅழுத்தத்திற்குள்ளான ராகுல் சவான், கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தனது இரட்டை பெண் குழந்தைகளையும் காட்டுப் பகுதியில் அழைத்து சென்று, ஈவு இரக்கமின்றி கொலை செய்தார்.பின்னர் நேராக வாஷிம் காவல் நிலையம் சென்று, தானே தனது குழந்தைகளை கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக் கொண்டார்.

செய்தியை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து உடனே சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு இரண்டு சிறுமிகளின் உடல்கள் சில பகுதிகள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. சாட்சியங்களை அழிக்க ராகுல் சவான் உடலுக்கு தீ வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement