advertisement

டெல்லி வன்முறையில் ஈடுபட்டோரில் 989 பேருக்கு குற்றப் பின்னணி

ஜூலை 28, 2026 6:50 முற்பகல் |

 

ஜூலை 20 அன்று டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய பேரணியின்போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக, டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

அதில், காவல்துறையினரைத் தாக்கியது மற்றும் அரசு வாகனங்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட வன்முறைச் செயல்களில் ஈடுக்கப்பட்டவர்கள் குற்றப்பின்னணி கொண்டவர் என கண்டறிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.கேமராக்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் பொதுமக்கள் எடுத்த வீடியோக்களை ஏஐ தொழில்நுட்பத்தால் ஆய்வு செய்து போலீசார் மற்றும் வாகனங்களை தாக்கிய 2,873 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் , 989 நபர்கள் கொடூரமான குற்றப் பின்னணி கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.

61 பேர் மீது பாலியல் வன்கொடுமை, 25 பேர் மீது பெண்களைத் துன்புறுத்துதல் 6 பேர் பேர் மீது மற்றும் போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவாகியுள்ளன.229 பேர் ஆயுத சட்டம் வழக்குகளிலும், 135 பேர் செயின் பறிப்பு வழக்குகளிலும், 19 பேர் கடத்தல் வழக்குகளிலும், 67 பேர் போதைப்பொருள் வழக்குகளும் உள்ளன." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரக் குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரும் என்றும், மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement