தமிழகத்திற்கு இரு நாள் ரெட் அலெர்ட்!
மே 28, 2025 11:29 முற்பகல் |
தென்மேற்கு பருவமழை கேரளத்தில் தொடங்கிய நிலையில், அதன் தாக்கம் தற்போது தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கனமழை பதிவாகி வருகிறது.
கோயம்புத்தூர், நீலகிரியில் கடந்த மூன்று நாள்களாகவும் தற்போது மற்றும் மே 29, 30 ஆகிய தினங்களிலும் அதி கனமழைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், இன்று (மே 28) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கருத்துக்கள்