தூத்துக்குடியில் இனி எந்த பகுதியிலும் மழை நீர் தேங்காது - மேயர் தகவல்
தூத்துக்குடியில் வருகின்ற மழைக்காலங்களில் எந்த பகுதியில் மழை நீர் தேங்காது என்று மேயர் ஜெகன் பெரியசாமி அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தெற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமையில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
தொடர்ந்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி "தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக இதுவரை 2700 சாலைகள் போடப்பட்டுள்ளன, மேலும் இந்த ஆண்டுக்கு 997 சாலைகள் போடும் பணி தொடங்கியுள்ளது, மேலும் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கிய பகுதிகள் அனைத்தும் மழை நீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக வருகின்ற மழைக்காலங்களில் எந்த பகுதியில் மழை நீர் தேங்காது. மேலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாநகராட்சி சொந்தமான இடங்கள் அனைத்தும் வரன்முறை படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக புதிதாக நிலம் வாங்குபவர்கள் மாநகராட்சி அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளை வாங்கும் படி அறிவுறுத்தினார்.
கருத்துக்கள்