advertisement

திருச்சிக்கு 2நாள் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கவர்னர்...!

மே 29, 2025 12:33 பிற்பகல் |

 

சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு திருச்சிக்கு தமிழக கவர்னர் ''ஆர்.என்.ரவி''  இரண்டு நாள் ஆன்மீக சுற்றுப்பயணமாக  செல்கிறார்.

இதில் முதலில் திருச்சியில் கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.

அதன்பின்னர், மாலை கண்டோன்மெண்ட் பகுதியிலுள்ள கோர்ட் யார்டு ஓட்டலுக்கு சென்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.இதில், நாளை அதாவது வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கும் சாமி தரிசனம் செய்கிறார்.

பிறகு அங்கு ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா மற்றும் குணசீலம் மகஹாத்மியம், வள்ளுவத்தில் மெய்ஞானம் ஆகிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை கொடுக்க இருக்கிறார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement