advertisement

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜூன் 14, 2025 3:36 முற்பகல் |

 


தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்படி லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட கோரி அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 2021 - 23ம் ஆண்டுகளுக்கு இடையில், 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய, 1,182 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டது.டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஒப்பந்ததாரர்கள் லாபமடையச் செய்ததன் மூலம் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க கூறி, மீண்டும் புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வேல்முருகன், விசாரணையை ஜூலை 3 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement