வழக்கில் 2வது முறையாக விசாரணைக்கு ஆஜராகாத மதுரை ஆதீனம்!
இரண்டு சமூகத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசிய வழக்கில் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஆதீனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
கடந்த மே 2-ம் தேதி சென்னை நோக்கி வந்த மதுரை ஆதீனம் பயணித்த காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த மற்றொரு காரும் உளுந்தூர்பேட்டை பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகின.
இரண்டு கார்களும் லேசாக சேதமடைந்த நிலையில் விபத்து குறித்து பேசிய ஆதினம், மாற்று மதத்தை சேர்ந்த சிலர் தன்னை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டினார் மதுரை ஆதினம், இதற்கு காவல் துறை மறுப்பு தெரிவித்தது.இந்த நிலையில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், இரு சமூகத்தினர் இடையே பகைமையை ஏற்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் மதுரை ஆதீனம் மீது சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் உள்ள சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் அலுவலகத்தில் வரும் 5-ம் தேதி ஆஜராகுமாறு மதுரை ஆதீனத்துக்கு 2-வது முறையாக போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
கருத்துக்கள்