advertisement

அரசியல் கட்சித் தலைவர் மாடுகளை வைத்து பேசுகிறார்; அண்ணாமலை கிண்டல்

ஜூலை 12, 2025 11:15 முற்பகல் |

 

சென்னையில் ஆசிரமத்தில் அரசியல், ஆளுமை தலைமைத்துவம் குறித்த பயிலரங்கில், அண்ணாமலை பேசியதாவது: நமது வாக்காளர்கள் முழுவதும் வித்தியாசமானவர்கள்.

40% வாக்காளர்கள் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு தான் யாருக்கு ஓட்டளிக்க போகிறோம் என்பதை முடிவு செய்கின்றனர். சித்தாந்தத்தைப் பார்த்து கட்சிக்கு ஓட்டளிப்பதில் இருந்து வாக்காளர்கள் வெளியில் வந்து விட்டனர்.

ஒரு வாக்காளர் பல விஷயத்தை பார்க்கிறார்கள். பல விஷயத்தை பார்த்து ஓட்டு போடுகிறார்கள். தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் மாடுகளை நிற்க வைத்து பேசிக் கொண்டிருந்தார். என்ன மாடு எல்லாம் வாக்காளர் உரிமை கேட்கிறதா? இன்னொரு அரசியல் தலைவர் மரம் ஏறி கொண்டு இருக்கிறார். இன்றைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாத்தையும் செய்கிறார்கள்.

பழிவாங்கும் போக்கு அரசியல்வாதிக்கு இருக்கலாம், ஆனால் ஒரு தலைவனுக்கு இருக்க கூடாது. நாம் சும்மா இருந்தாலும் நமக்கு அடைமொழி கொடுத்து போஸ்டர் அடித்து விடுகின்றனர். அரசியலில் எந்த பதவியும் ஒருநாள் இல்லாமல் போவது இயல்பு தான். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement