அதிக பாரத்துடன் வந்த கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை
ஜூலை 12, 2025 4:12 பிற்பகல் |
அதிக பாரத்துடன் வந்த 9 கனரக வாகனங்களின் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் . அவரது உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் தொடர் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிக பாரத்துடன் கனிம வளங்கள் ஏற்றி வந்த 9 கனரக லாரிகள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கருத்துக்கள்