advertisement

மேலாய்க்குடியில் தொடர் மழை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

டிச. 13, 2024 9:52 முற்பகல் |

மேலாய்க்குடியில் தொடர் மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி கீர்த்திகா இறந்தார். கிராமமே சோகமயமாக உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 தினங்களாக  பெய்த தொடர் கனமழையில் பரமக்குடி அருகே உள்ள மேலாய்க்குடி பகுதியில் யாதவர் தெருவில் வசிக்கும் கூலி தொழிலாளி பால்ராஜ் என்பவரின் ஓட்டு வீட்டின் சுவர் மழையால் அதிக ஈரப்பதமாகி வெளிப்பகுதியில் இடிந்து விழுந்துள்ளது. 
அது சமயம், பால்ராஜின் மகள்  கீர்த்திகா(5) கழிப்பறை செல்வதற்காக நடந்து சென்ற பொழுது கீர்த்திகாவின் மேல் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதன் பின்பு சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து எமனேஸ்வரம் போலீசார்கள் விசாரணை செய்து வருகின்றனர். சிறுமி மேலாய்குடி அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இச்சம்பவம் கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement