advertisement

பரமக்குடியில் புத்தகதிருவிழா - அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் பட்டிமன்றம்

ஜூலை 31, 2025 5:06 முற்பகல் |

பரமக்குடியில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா வில் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் பட்டிமன்றம் நடைபெற்றது .

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ராஜா திருமண மகாலில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா
 நடைபெற்று வருகின்றன.புத்தகத் திருவிழாவின் ஆறாவது நாள் நிகழ்வாக பரமக்குடி அரசு மகளிர் கல்லூரி மாணவியர்கள் பட்டிமன்ற நிகழ்வை நடத்தினர். " அறிவை வளர்க்க பெரிதும் உதவுவது புத்தகமா " ? 
" இணையமா " ? எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது .இன்றைய காலகட்டத்தில் புத்தக அறிவு மிகவும் அவசியம். மேலும் இணையமும் தேவை என முடித்தனர். 

பள்ளி , கல்லூரி மாணவர் - மாணவியர்கள் கலைநிகழ்ச்சி நடந்தன. ஜவ்வாது பள்ளியின்  மாணவர் - மாணவியர்கள் கலை நிகழ்ச்சி நடத்தி அசத்தினர்.  யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தலைப்பில் தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் ஹுசேன் மன்பாஈ என்பவர் சிறப்புரையாற்றினார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement