advertisement

எமனேஸ்வரம் சௌராஷ்ட்டிரா பேரவை அரங்கத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

ஆக. 05, 2025 11:15 முற்பகல் |

எமனேஸ்வரம் சௌராஷ்ட்டிரா பேரவை அரங்கத்தில் சிறப்பு மருத்துவ முகாம், நெசவாளர்களுக்கான நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைக்கிறார்.

1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கப்பட்ட "சுதேசி இயக்கத்தினை" நினைவுகூறும் வகையில், நாடு முழுவதும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாகவும், இந்தியாவின் கைத்தறித் தொழிலை முன்னிலைப்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கைத்தறித் தொழிலின் முக்கியத்துவம் , தனித்தன்மை, நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் கைத்தறித் துறையின் பங்களிப்பு, கைத்தறி தொழிலினை ஊக்குவித்தல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து, கைத்தறி உதவி இயக்குநர் வே.சேரன் உள்ளிட்ட கைத்தறித் துறை அதிகாரிகள் தெரிவித்தாவது :
"11-வது தேசிய கைத்தறி தினத்தைக்" கொண்டாடும் விதமாக பரமக்குடி சரகத்தில் 07.08.2025 வியாழக் கிழமையன்று எமனஸ்வரம் சௌராஷ்ட்டிரா பேரவை அரங்கத்தில் சிறப்பு மருத்துவ முகாம் , நெசவாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. விழாவிற்கு , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தசிம்ரன்ஜீத் சிங் காலோன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார். மேலும், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் , பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி உள்பட உள்ளுர் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் , நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பரமக்குடி-எமனேஸ்வரம் பகுதியில் பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து, பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தைகள் நலம், சித்த மருத்துவம், இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை , நவீன ECG பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.மேலும் , கல்லூரி மாணவியர்களிடையே கைத்தறி ஜவுளி இரகங்கள் / பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைத்தறி இரகங்களைப் பிரபலப்படுத்தும் கண்காட்சி , விழிப்புணர்வு நிகழ்ச்சி 06.08.2025 , 07.08.2025 ." ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரையில் உள்ள தாசீம்பீவி மகளிர் கலைக் கல்லூரியில்" நடைபெற உள்ளது என கைத்தறித்துறை உதவி இயக்குநர்  செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement