advertisement

பரமக்குடியில் லோக் அதாலத் - ரூ. 2.85 லட்சத்திற்கு தீர்வு

மார். 15, 2026 5:24 முற்பகல் |

பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 408 வழக்குகளில் ரூ 2, 85, 82,237 தீர்வு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது .

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் , முதன்மை மாவட்ட நீதிபதி  மெகபூப்அலிகான்  உத்தரவின் படி ,  ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் 408 வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்வு தொகையாக ரூபாய். 2,85,82,237 (இரண்டு கோடியே எண்பத்திஐந்து  லட்சத்து எண்பத்தி இரண்டாயிருத்தி இருநூற்றி முப்பத்தி ஏழு) அறிவிக்கப்பட்டது.  

வழக்கு நிகழ்விற்கு , கூடுதல் மாவட்ட நீதிபதி பாலமுருகன்   ,சார்பு நீதிபதி அறிவு  தலைமை தாங்கினார். குற்றவியல் நீதிபதி ஐயப்பன்   முன்னிலை வகித்தார்.  அமர்வு வழக்கறிஞர்கள் திருமூர்த்தி , நந்தகோபால் கலந்து கொண்டனர். மூத்த இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை வட்ட சட்ட பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் முத்து விஜயன் உள்பட சட்ட தன்னார்வலர்கள் சிறப்பாக  செய்திருந்தனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement