திமுக.,வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது: அப்பாவு பேட்டி
மார். 14, 2026 4:17 முற்பகல் |
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சட்டபேரவைத் தலைவர் மு. அப்பாவு கூறியதாவது: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டுவிட்டது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியில் அமருவார். அப்போது மகளிருக்கான உரிமைத் தொகை ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "இது ஒரு மிருகத்தனமான செயல்; வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் அவர்கள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும்," என்று அவர் உறுதியளித்தார்.





கருத்துக்கள்