புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்வு
புதுச்சேரி மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலை ரூ.50 முதல் ரூ.325 வரை உயர்த்தப்படுவதாக மாநில கலால்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் மது பானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பிராந்தி, விஸ்கி, ஒயின் உள்ளிட்ட மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது. இதில், ஒரு லிட்டர் மதுபானத்துக்கு ரூ 50 முதல் ரூ.325 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பீர் வகைகளுக்கு ரூ.30 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதால், இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி கலால்துறை தெரிவித்துள்ளது. இதேபோல, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் மதுபானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டன.
அனைத்து மதுபானங்களின் விலையும்...தற்போது, இந்த ஆண்டு மதுபான விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபானங்களின் வகைகளும் விலை உயரும் என தெரிகிறது. இதில், அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்றாலும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
கருத்துக்கள்