advertisement

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன் ஏலக்கூடம் : முதல்வர் திறந்து வைத்தார்

மே 28, 2025 10:21 முற்பகல் |

 


தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன் ஏலக்கூடத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் ரூ.10 கோடி செலவில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மீன்ஏலக்கூடம், வலை பின்னும் கூடம் மற்றும் மணப்பாட்டில் ரூ.41 கோடி செலவில் நீட்டிக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு மேம்பாட்டுப் பணிகளை மீனவர்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, திருவொற்றியூரில் இன்று (28.05.2025) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக 272 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரை மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட 426 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை என 13 முடிவுற்ற திட்டப் பணிகளை மீனவர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்து, 

இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் மற்றும் ரோச்மா நகர் மீனவ கிராமங்களில் மொத்தம் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சிறப்பித்ததைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்கட்டமைப்பு நிதி (FIDF) உதவி திட்டத்தின்கீழ் ரூ.10 கோடி செலவில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மீன்ஏலக்கூடம் மற்றும் வலை பின்னும் கூடத்தினை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், பார்வையிட்டார். 
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement