தூத்துக்குடியில் கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள்
ஜூன் 16, 2025 5:34 முற்பகல் |
தூத்துக்குடியில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் இன்று 225 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில்கொண்டு, வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப். 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தடைக்காலம் தொடங்கி, ஜூன் 14ம் தேதி (சனிக்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைந்தது.
ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து காலை 5 மணிக்கு விசை படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கருத்துக்கள்