ஜூலை 2 ல் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பழைய பேப்பர்கள் ஏலம்
தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களின் மதிப்பீடு செய்யப்பட்ட பழைய விடைத்தாள்கள், நூலகப் பழைய தினசரி நாளிதழ்கள் கழிவுநீக்கம் செய்து ஏல விற்பனை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களின் மதிப்பீடு செய்யப்பட்ட பழைய விடைத்தாள்கள் / Assignment பேப்பர்கள்/பழைய Record notes/ நூலகப் பழைய தினசரி நாளிதழ்கள் சுமார் 4 டன் இருப்பில் உள்ளதால், அவற்றை கழிவுநீக்கம் செய்யும் பொருட்டு 02.07.2025 அன்று காலை 11.00 மணியளவில், கல்லூரி வளாகத்தில் வைத்து பொது ஏல விற்பனை நடைபெறும் எனவும் ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் நிபந்தனைகளை பின்பற்றி கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,
ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ரூ,1000/- (ரூபாய் ஆயிரம் மட்டும்) முன்பணமாக செலுத்த வேண்டும். அதிக தொகைக்கு ஏலம் கோரும் ஏலதாரருக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும். அதிக விலைக்கு ஏலம் கோரும் ஏலதாரர் பொருட்களின் மொத்த விலையில் 50% மற்றும் அரசு விதிகளின்படி GST % தொகையினை உடனடியாக செலுத்தினால் மட்டுமே அவருக்கு விற்பனை செய்வது உறுதி செய்யப்படும். அன்னாரின் நிரந்தர வீட்டு முகவரி இரண்டு சாட்சிகள் முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். தெரிவு செய்யப்பட்ட ஏலதாரரின் விபரங்கள் அவர் ஏலம் கோரிய தொகை விவரங்கள் தொழில்நுட்பக் கல்வி ஆணையரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.
ஆணையர் அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டவுடன் மீதித் தொகையுடன் விற்பனை வரியையும் செலுத்திய பின்னர் பொருட்களை உரிய அனுமதியுடன் எடுத்துச் செல்ல வேண்டும். பொருட்களை ஏலதாரர் அவரது சொந்த செலவில் எடுத்துச் செல்ல வேண்டும். மாணவர்களின் மதிப்பீடு செய்யப்பட்ட பழைய அகத்தேர்வு பேப்பர்கள் மற்றும் பழைய Record notes ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக்கி பின்னரே எடுத்துச் செல்ல வேண்டும். மேற்காணும் நிபந்தனைப்படி ஏலதாரர் பொருட்களை எடுத்துச் செல்லவில்லை எனில் அவர் செலுத்திய முன்பணத் தொகையினை இழப்பார் எனவும் அறிவிக்கப்படுகிறது.
ஏலம் விடுதல் தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் அனைத்து வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பபடுகிறது. ஏலக்குழு நிர்ணயித்த விலையை விட, ஏலத்தொகை குறைவாக இருக்குமாயின் ஏலத்தை விடுவதற்கோ, நிறுத்தி வைப்பதற்கோ, ரத்து செய்வதற்கோ ஏலக்குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு. இப்பொருள் குறித்து ஏலக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்