திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு..!
ஜூன் 23, 2025 12:39 பிற்பகல் |
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்ற முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு வருகிற ஜூலை 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நடைபெறும் என நிபுணர் குழு முடிவு செய்துள்ளது.
தேவேளையில் அன்றைய தினம் மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில், திருச்செந்தூரை சேர்ந்த சிவராம சுப்பிரமணியன் என்பவர் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட கோவில் நிபுணர்குழு முடிவு செய்த நேரத்தில் குடமுழுக்கு நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
கருத்துக்கள்