தூத்துக்குடி அருகே இளைஞர் மீது குண்டாஸ்
ஜூலை 16, 2025 2:24 முற்பகல் |
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே ஆற்று மணல் திருடிய வழக்கில் சம்பந்தப்பட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 26.06.2025 அன்று லோடு வேனில் ஆற்று மணல் திருடிய வழக்கில் கலியாவூர் பகுதியைச் சேர்ந்த வேல் மகன் பெருமாள் (25) என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று முறப்பநாடு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருத்துக்கள்