advertisement

தூத்துக்குடியில்  மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது

அக். 21, 2025 2:07 முற்பகல் |

 

தூத்துக்குடியில் தொடர் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி 3வது மைல் அருகே உள்ள திருவிக நகரில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.மேலும் தபால் தந்தி காலனி, கதிர்வேல் நகர் உள்ளிட்ட மாநகர பகுதியில் தாழ்வான இடங்களில் குளம் போல் மழைநீர் தேங்கியது. மழைவெள்ளம் வடியாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement