advertisement

பெங்களுரு : லாரி- கார் மோதி விபத்து - 5 பேர் பலி

மே 06, 2025 10:02 முற்பகல் |

ஹுப்பள்ளியில் உள்ள விஜயபுரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இங்கலஹள்ளி கிராஸ் அருகே லாரிக்கும் காருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவை சேர்ந்த ஸ்வேதா (29), அஞ்சலி (26), சந்தீப் (26), விட்டல் (55), சசிகலா (40) ஆகியோர் உயிரிழந்தனர்.விஜயபுராவில் இருந்து ஹூப்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் இருந்து வந்த லாரி மீது மோதியது. மோதலின் வலிமை காரணமாக காரில் இருந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அவர் ஹோட்டல் தொழிலுக்காக பாகல்கோட்டுக்குச் சென்றிருந்தார். ஹுப்பள்ளியிலிருந்து ஷிவமொக்கா நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து ஹுப்பள்ளி கிராமப்புற காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement