மகன் இறந்த சோகத்தில் பெற்றோர் தற்கொலை !
சத்தீஸ்கர் மாநிலம் ஜஞ்ச்கீர் சம்பா மாவட்டத்தில் 48 வயதான கட்டிடத் தொழிலாளி கிருஷ்ண பட்டேல், அவரது மனைவி ரமா பாய் மற்றும் 21 வயதான ஒரே மகன் ஆதித்யா பட்டேல் வசித்து வந்துள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் ஆதித்யா துரதிஷ்டவசமாக உயிரிழந்தது. மகனின் மறைவால் தம்பதியினர் துயரத்திலும் மனவேதனையிலும் மூழ்கியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை, கிருஷ்ண–ரமா தம்பதியினர் தங்கள் வீட்டின் முன் முற்றில் உள்ள மரத்தில் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்தனர். இந்த தற்கொலைக்கு முன் அவர்கள் நான்கு பக்க கடிதங்களையும், ஒரு வீடியோ செய்தியையும் பதிவிட்டு, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர்கள்,"எங்கள் வாழ்க்கையின் அஸ்திவாரமும், உலகமுமாக இருந்தவன் ஆதித்யா. அவன் நல்ல மகனாக மட்டுமல்ல, உண்மையான நண்பனும். அவனது சிரிப்பால் இந்த வீடு இறைவனின் ஆசிபெற்ற இடமாக இருந்தது.
ஆனால் அந்த விபத்திற்குப் பிறகு வீடு நிசப்தமாகி விட்டது. அவனில்லாமல் வாழ முடியவில்லை".இந்த தற்கொலையால் கிராம மக்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது.





கருத்துக்கள்