advertisement

மதுரை தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

மே 05, 2025 9:45 முற்பகல் |

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கொடைக்கானலில் நடந்த ஜனநாயகன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கடந்த 1-ந்தேதி மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். 

அங்கு அவரை த.வெ.க. தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வரவேற்றனர்.இதனால் அந்த இடத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் விமான நிலையத்தில் அனுமதியின்றி கூடுதல் மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, த.வெ.க. மதுரை மாவட்ட செயலாளர் தங்கபாண்டி மற்றும் நிர்வாகிகள் மீது பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement