advertisement

கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற 29-ந்தேதி முதல் விண்ணப்பிக்க அழைப்பு

மே 22, 2025 3:46 முற்பகல் |


கலைஞர் மகளிர் உதவித்தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்கள் வரும் 29-ந்தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம் என  தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில்,  கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ்  மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் தற்போது 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகள் உள்ளநிலையில்1 கோடியே 12 லட்சம் பெண்கள் உரிமைத்தொகை பெற முடியவில்லை.  .

இந்தநிலையில் தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தவகையில் இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் கலைஞர் மகளிர் உதவித்தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்கள் வரும் 29-ந்தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம் என  தமிழக அரசு தெரிவித்துள்ளது.அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement