advertisement

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு தீர்ப்பு - முதலமைச்சர் கருத்து

மே 28, 2025 8:36 முற்பகல் |

 

மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதங்களில் காவல் துறை நீதியைப் பெற்றுத் தந்துள்ளது. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்றத்துக்கும் நன்றி என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து எக்ஸ் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதங்களில் நமது காவல்துறை நீதியைப் பெற்றுத் தந்துள்ளது. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

'குற்றம் நடக்கக் கூடாது; நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது, விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்' என்று தான் காவல்துறையினரிடம் நான் தொடர்ந்து கூறி வருகின்றேன். குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம். சட்டநீதியையும் - பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம்" என தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement