advertisement

இந்தியாவில் 1.9 ஆக குறையும் கருவுறுதல் விகிதம்

ஜூன் 11, 2025 11:01 முற்பகல் |

 

உலக அளவில் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) கணக்கெடுக்கின்படி கருவுறுதல் விகிதம் எப்படி இருக்கிறது என்று நேற்று ஆய்வு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் இந்தியாவில் கருவுறுதல் மிக வேகமாகக் குறைந்து கொண்டே வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது. 

உலக அளவில் கருவுறுதல் விகிதம் எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது. அதில் ஏற்கனவே மக்கள் தொகையில் முன்னணியில் இருக்கும் நாடுகளின் கருவுறுதல் விகிதம் எந்த நிலையில் இருக்கிறது என்பது 
வருமான வரி செலுத்துவோருக்கு முக்கியமான அப்டேட்.. ஜூன் 15 வரை வெயிட் பண்ணுங்க!

மக்கள் தொகையில் முன்னணியில் இருந்தாலும் இந்தியர்களின் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) 1.9 ஆகக் குறைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) அறிக்கையில் சொல்லப்படுவதாவது,இந்த அளவானது நாட்டின் கருவுறுதல் மாற்று அளவை விகிதமான (குறைந்தபட்ச அளவு) 2.1 ஐ விட குறைவு.இதே கருவுறுதல் விகிதம் கடந்த 2014 ஆம் ஆண்டு 2.3 ஆகவும் 2021 ஆம் ஆண்டு 2.0 ஆகவும் இருந்தது.

இந்த UNFPA வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பார்த்தால் சீனா மற்றும் இந்தியாவில் தான் கருவுறுதல் விகிதத்தின் அளவு மிக மிக மோசமாகக் குறைந்து இருக்கிறது என்றும் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 2.3 இல் இருந்து 1.9 ஆகக் குறைந்திருந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அதேசமயம் ஒரு எச்சரிக்கை மணியாகவும் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் ஏற்கனவே இருக்கும் மக்கள் தொகையைப் பராமரிப்பதற்கான அளவை விட இந்த விகிதம் குறைவாக இருப்பது கொஞ்சம் ஆபத்தானது தான் என்றும் கூறப்படுகிறது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement