துணை முதலமைச்சர் உதயநிதியை திமுக பொதுச் செயலாளராக்க வேண்டும் - காங்.,நிர்வாகி ராஜன் கோரிக்கை
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை திமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்ய வேண்டும் என காங்.,நிர்வாகி ராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:-அடுத்து வரவிருக்கும் 2025ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மிக எளிதாக வெற்றி பெற்று,திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்பது என்பது காலத்தின் கட்டாயமாகும்.மேலும் இந்த வெற்றிக்கான அடித்தளமாக, தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், ஆதரவும் பெற்றுள்ள இளம் தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. *உதயநிதி ஸ்டாலின் அவர்கள், திமுகவின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய தூணாக மாறியுள்ள நிலையில், விரைவில் நடைபெற இருக்கும் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை திமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்ய வேண்டும் என்பதே தமிழக காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவு சார்பில் கோரிக்கை யாகவும், விருப்பமாகவும் தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 39/39 தொகுதிகளிலும் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றதில் முக்கிய பங்கு வகித்தவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், எனவே எதிர்வரும் 2026-ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றிக்காக தமிழகத்தின் ஒட்டு மொத்த இளைஞர்களின் மாபெரும் சக்தியாக செயல்படுவார் என நம்புகிறோம் எனவே அவருக்கு திமுக பொது செயலாளர் என்ற உயரிய பொறுப்பு வழங்க வேண்டும்.அதன் மூலம், தமிழகத்தில் உள்ள 234 சட்ட மன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் முழு உத்வேகத்துடன் செயலாற்றி பிரச்சாரம் செய்ய ஏதுவாக இருக்கும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்வதன் மூலம் கூட்டணி கட்சிகள் மற்றும் திமுக தொண்டர்களின் ஈடுபாடும் அதிகரிக்கும்,இதை தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கனிவுடன் பரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
கருத்துக்கள்