தமிழகத்தில் மின்சார பேருந்து சேவை...! - தொடங்கி வைத்த முதலமைச்சர்
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் நெடுங்காலமாக டீசலில் இயங்கும் பேருந்துகள் உபயோகத்தில் வந்தது.ஆனால், முதல் முறையாக மின்சார பேருந்துகள் விடப்பட்டுள்ளது.மேலும், சென்னையின் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டை குறைக்கும் நோக்கில் டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக 1225 தாழ்தள மின்சார பஸ்களை உலக வங்கி உதவியுடன் வாங்க முடிவு செய்யப்பட்டது.
இன்று, வியாசர்பாடி பணிமனையிலிருந்து 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.கி.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாசர்பாடிக்கு நேரில் சென்று 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.அந்த பேருந்தில் ஏறி அதிலுள்ள வசதிகளையும் பார்வையிட்டார்.
அதற்கு முன்னதாக அங்கு ரூ.47.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த பணிமனையையும் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு. கலாநிதி எம்.பி., மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், அசோக் லேலண்ட் நிறுவன அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த 120 புதிய மின்சார பேருந்துகள் 11 வழித்தடங்களில் முதலில் இயக்கப்படவுள்ளது.
கருத்துக்கள்