ராமநாதபுரம் மாவட்டத்தில் அடிக்கடி தொடரும் மின்தடை - பொதுமக்கள் அவதி ...
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி , திருவரங்கம், முதுகுளத்தூர் உள்பட பெரும்பாலான பகுதிகளில் தற்போதைய ஆட்சியில் இரவு - பகல் பாராது அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
இது சம்மந்தமாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மனவேதனையுடன் கூறியதாவது :ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது இரவு, பகல் பாராது அடிக்கடி திடீர் ... திடீரென ... மின்தடை ஏற்படுவதால் முதியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், பிரசவ பெண்கள், பச்சிளம் குழந்தைகள் உள்பட பொதுமக்கள் பெரும் அவதியுற்று கவலையடைந்து வருகின்றனர்.வியாபார நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், ஆன்லைன் புக்கிங், கல்வி பயிலும் மாணவர் - மாணவியர்கள் மின்தடையால் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
மேலும், வழிபாட்டு ஸ்தலங்கள், நிச்சயார்த்தம், திருமணம் போன்று விசேஷங்களில் திடீர் மின்தடை ஏற்படுவதால் நிகழ்வுகள் பாதிக்கப்பட்டு மனம் சஞ்சலப்படுகிறது.
நள்ளிரவு நேர மின்தடையால் வியர்வை ஏற்படுவதுடன் கொசுகளின் க்ய்ங் ... க்ய்ங் ... க்ய்ங் ... ரீங்காரத்தால் தூக்கமின்றி அவதிப்படுவதுடன் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுகிறது.பொதுமக்கள் நலனில் அக்கறை செலுத்தி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தற்போதைய ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இது போன்று அடிக்கடி மின்தடை ஏற்படுவது பொதுமக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மீது அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இனிவரும் காலங்களிலாவது இது போன்று அடிக்கடி மின்தடை ஏற்படாத வண்ணம் மாவட்ட நிர்வாகமும், சம்மந்தப்பட்ட மின்துறையினர் அந்தந்த பகுதிகளில் மிகுந்த கவனம் செலுத்தி மக்களை சுபிட்சமாக வாழ வழிவகை செய்ய வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி கூறியுள்ளனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்