advertisement

தூத்துக்குடியில் சிறப்பு மருத்துவக் கண்காட்சி

ஜூன் 30, 2025 11:04 முற்பகல் |

 


தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரியின் 25வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவக் கண்காட்சியினை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார். 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் 25வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு இன்று (30.06.2025), மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவக் கண்காட்சியினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தலைமையில் திறந்து வைத்து பார்வையிட்டார். 

அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் பயிலும் அனைத்து துறையைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து நடத்தும் மருத்துவ கண்காட்சி MEDVERSE 2025 இன்றையதினம் அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி, மக்கள் மத்தியில் மருத்துவ அறிவையும், நோய்த்தடுப்பு விழிப்புணர்வையும் உருவாக்கும் நோக்கத்தில் நடத்தப்படுகிறது. 

கண்காட்சியை பள்ளி மாணவர்கள் இன்று முதல் 03.07.2025 வரையும், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் மருத்துவ ஆர்வலர்கள் 04.07.2025 மற்றும் 05.07.2025 ஆகிய தேதிகளில் பார்வையிடலாம் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.  

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement