advertisement

ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி

ஜூன் 30, 2025 10:04 முற்பகல் |

 

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த 443 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, தனி நபர் வீடு வழங்குதல் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்ததாவது :

ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து , முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் 11 முன்னாள் இராணுவ வீரர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி முடிந்ததற்கான சான்றிதழ்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் / நில எடுப்பு ந.சரவணன் , சமூக பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி, ஆதி திராவிடர் மாவட்ட நல அலுவலர் செல்வி , மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமாறன் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட முன்னாள் இராணுவ வீரர்கள் ,அரசு அலுவலர்கள்,  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement