நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா துவக்கம்
உலக பிரசித்தி பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலின் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உலக பிரசித்தி பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் இந்த ஆண்டு ஆனித்திருவிழா இன்று காலை கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து, மகா மண்டபத்தில் யாக சாலை பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் பிரதான கொடி மரத்திற்கு அருகில் எழுந்தருளிய சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் வெகுவிமரிசியாக நடைபெற்றது . அதனை தொடர்ந்து சரியாக காலை 7.30 மணியளவில், மேள தாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கருத்துக்கள்