advertisement

ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதாகக் கூறி பண மோசடி :  இளைஞர் கைது

ஏப். 04, 2026 5:09 முற்பகல் |


 
சென்னை: ஏடிஎம் மையத்​தில் பணம் எடுக்க உதவுவது​போல வயதானவர்​கள், மாற்​றுத் திற​னாளி​களை குறி​வைத்து பல மாநிலங்​களில் பண மோசடி​யில் ஈடு​பட்ட ஆந்​திர இளைஞர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

மதுரை மாவட்​டத்​தைச் சேர்ந்த பார்​வைத்​திறனற்ற மாற்​றுத் திற​னாளி பாண்​டியன் (61). இவர் வேலை நிமித்​த​மாக சென்னை வந்து கடந்த 31-ம் தேதி சென்னை பல்​கலைக்​கழக வாளகத்​தில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்​தில் பணம் எடுக்​கச் சென்​றார்.அப்​போது அங்கு வந்த நபர் ஒரு​வர் பாண்​டியனிடம் பணம் எடுக்க உதவி செய்​வ​தாகக் கூறி ஏடிஎம் கார்டு மற்​றும் பின் நம்​பரை வாங்கி ஏடிஎம் இயந்​திரத்​தில் போட்​டு​விட்​டு, பணம் இல்லை என்று கூறி அவரை ஏமாற்​றி, மறைத்து வைத்​திருந்த மற்​றொரு ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்​பி​யுள்​ளார்.

பின்​னர் அந்த நபர் பாண்​டியனின் ஏடிஎம் கார்டை அரு​கில் உள்ள வேறு ஏடிஎம் மையத்​தில் பயன்​படுத்தி ரூ.23,500-ஐ எடுத்​த​போது, பாண்​டியனின் செல்​போனுக்கு குறுஞ்​செய்தி வந்​தது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் இந்த விவ​காரம் தொடர்​பாக அண்​ணாசதுக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார்.


அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதல் கட்​ட​மாக வங்கி ஏடிஎம் மையத்​தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு​களை ஆய்வு செய்​தனர். இதில் முதி​ய​வரை ஏமாற்றி அவரது ஏடிஎம் கார்டை பயன்​படுத்தி பண மோசடி​யில் ஈடு​பட்​டது ஆந்​திர மாநிலத்​தைச் சேர்ந்த சிடா​தாலா சுனில் (27) என்​பது தெரிந்​தது.

தலைமறை​வாக இருந்த அவரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.  

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement