advertisement

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

ஜூன் 15, 2026 5:50 முற்பகல் |

 

தமிழக முதல்-அமைச்சரும் தவெக தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

த.வெ.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டநிலையில், சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது வழக்கறிஞர்கள் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்று தரப்புகள் கோரிக்கை வைத்தன.
இதையடுத்து, வழக்கின் விசாரணை ஜூன் 15-ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இன்று விசாரணைக்கு முதல்-அமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் ஆஜராகாததால், வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement