“வாயை திறங்க CM” வாசகத்தோடு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுக
சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில், சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுகவினர் “வாயை திறங்க CM” என்ற வாசகத்தோடு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.
தமிழகத்தின் 17–வது சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தலைமையில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. முன்னதாக, ஆளுநர் அர்லேகரை சமீபத்தில் சந்தித்த பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், பேரவையில் உரை நிகழ்த்த அழைப்பு விடுத்தார்.காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.அதேபோல்,எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி அரசுக்கு என்ன மாதிரியான சவாலை விடுக்கவிருக்கிறார். முதல்வர் விஜய் எப்படி அவற்றை சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் பலமாக உருவாகியுள்ளது.
இந்தச் சூழலில், சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுகவினர் “வாயை திறங்க CM” என்ற வாசகத்தோடு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.





கருத்துக்கள்