advertisement

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

ஜூன் 03, 2026 4:32 பிற்பகல் |

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் - மாணவியர்கள் சேர்க்கை துவக்கம் என பொறுப்பு முதல்வர் அறிவழகன் தகவல் தெரிவித்துள்ளார்.

அரசு கலை கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வி  ஆண்டிற்கான மாணவர் - மாணவியர்கள் சேர்க்கை  (ஜூன் 05) முதல் கவுன்சிலிங்  தொடங்கப்படும் என தமிழக அரசு உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.தொடர்ந்து , ராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் ஜுன் 05 -ந் தேதி (வெள்ளி) விளையாட்டு, என்சிசி, முன்னாள் ராணுவவீரர்கள் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டு அடிப்படையில்  மாணவர் - மாணவியர்கள் சேர்க்கை நடைபெறும். 

இதனைத் தொடர்ந்து, ஜுன். 08 -ந் தேதி (திங்கள்) பொதுப் பிரிவினருக்கு அரசு இட ஒதுக்கீடு அடிப்படையில் அனைத்து அறிவியல் (பிஎஸ்சி) பட்டப் படிப்புகளுக்கான  மாணவர் - மாணவியர்கள் சேர்க்கையும், ஜுன். 09 -ந் தேதி (செவ்வாய்)  வணிகவியல், தொழில் நிர்வாகவியல் படிப்புகளுக்கும், ஜுன் 10 -ந் தேதி (புதன்)  தமிழ், ஆங்கிலம்,வரலாறு, பொருளியல் ஆகிய கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. 

இது சம்மந்தமாக பொறுப்பு முதல்வர்  அறிவழகன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் "  2026-27 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் - மாணவியர்கள் சேர்க்கை ஜுன். 05  முதல் ஜூன்.10 வரை காலை 09 மணி முதல்  நடைபெறுகிறது. இந்த கல்லூரியில் விண்ணப்பித்துள்ள மாணவர் - மாணவியர்கள்,  ஆன்லைன்  விண்ணப்பப் படிவத்துடன் உரிய அசல் சான்றிதழ்கள்  இரண்டு நகல்கள், ஆதார் கார்டு , பாஸ்போர்ட் சைஸ் போட்டோ- வுடன்  கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.மேலும்  , மாணவர்-மாணவியர்களுக்கு கைபேசி , குறுந்தகவல்கள், மின்னஞ்சல்  மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைக்காதவர்கள் நேரடியாக கல்லூரியை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்  என தெரிவித்துள்ளார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement