advertisement

தூத்துக்குடி : கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

ஜூன் 03, 2026 4:38 பிற்பகல் |

 

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்து சிறப்பாக பணிபுரிந்த முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் நீதிமன்ற தலைமை காவலர் சிவநேசமாணிக்கம் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா நேற்று (03.06.2026) நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement