தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை 2 வாரம் நீட்டிப்பு
தாம்பரம்-நாகர்கோவில் இடையே வாரந்திர ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு திங்கட்கிழமைகளிலும் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. அதன் சேவை காலம் நிறைவடைவதையொட்டி, மேலும் 2 வாரத்திற்கு நீட்டித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தாம்பரம்-நாகர்கோவில் இடையேயான சிறப்பு வாரந்திர ரெயில் சேவை 2 வாரம் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு (வ.எண் 06012) வரும் 6 மற்றும் 13-ந் தேதிகளிலும் (ஞாயிற்றுக்கிழமை), தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு (06011) வரும் 7 மற்றும் 14-ந் தேதிகளிலும் (திங்கட்கிழமை) சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துக்கள்