கன்னியாகுமரி : காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி சைபர் பிரிவு போலீசார் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தனர் நடவடிக்கையால் தற்போது சுமார் 58 லட்சம் மதிப்புள்ள 335 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்ட மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி மீட்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் உரிய நபரிடம் 15.12.2025 அன்று ஒப்படைத்தார்கள் மேலும் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்த வருடத்தில் இதுவரையிலும் சுமார் 2 கோடியை 5லட்சம் மதிப்புள்ள 1265 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த செல்போன்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு வெளி மாநிலத்தில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





கருத்துக்கள்