advertisement

நெல்லை : கணவர் கண்முன்னே மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை - மூவர் கைது

டிச. 16, 2025 4:03 முற்பகல் |

 

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண், அவரது கணவரின் கண்முன்னே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளம் பகுதியில் செயல்படும் ஒரு கல்குவாரிக்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்கு சேர்ந்துள்ளனர். இருப்பினும், போதிய அடிப்படை வசதிகள் மற்றும் போதுமான சம்பளம் இல்லாத காரணத்தால், அசாம் தம்பதியர் வேலையில் இருந்து விலகுவதாக கூறியுள்ளனர். தொடர்ந்து, கேரளா மாநிலத்திற்கு வேலைக்கு செல்வதாக முடிவு செய்து, நேற்று அவர்கள் திருநெல்வேலிக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர்.

இதற்கிடையே, அவர்களை செல்போனில் தொடர்பு கொண்ட முகமது மஹ்புல் உசேன், கல்குவாரிலேயே வேலை செய்யும்படி மிரட்டினாராம். தொடர்ந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தனது இருசக்கர வாகனத்தில் இரண்டு இளம் சிறார்களுடன் சிவந்திபட்டி பகுதியில் மஹ்புல் உசேன் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த அசாம் தம்பதியரை, மஹ்புல் உசேன் உள்ளிட்டோர் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றனர்.

பின்னர், கல்குவாரியில் இருந்து பணம் எடுத்ததாக கூறி மூவரும் சேர்ந்து அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, கணவர் கண்முன்பே முகமது மஹ்புல் உசேன் உட்பட மூவரும், அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முகமது மஹ்புல் ஹுசைன் மற்றும் இரண்டு இளம் சிறார்களை கைது செய்தனர். சிறுவர்கள் இருவரும் நெல்லையை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.  

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement