advertisement

நாகர்கோவில் : நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

ஜூலை 25, 2026 8:32 முற்பகல் |

நாகர்கோவில், ​ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் நாகர்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

​நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, CPIML விடுதலை மாவட்ட செயலாளர் சுசீலா தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தின் முக்கிய முழக்கங்கள்:​நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,​மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்கு!​மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும்!​இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்:

​எஸ். எம். அந்தோணி முத்து (CPIML நிலைக்குழு உறுப்பினர்)​அல்காலித் (விடுதலை சிறுத்தைகள் கட்சி - ​கார்மல் (மாநில குழு உறுப்பினர்) ​அர்ஜுனன் (மாவட்ட குழு உறுப்பினர்) ​சகாய பிரின்ஸ் (மாநகர செயலாளர்) ​சூசை மரியான் (ரெட் ஸ்டார்) ​அனிதா பிரின்ஸி (மாவட்ட தலைவர்) மணவைக்கண்ணன் (அமைப்பின் மாவட்ட செயலாளர்) ​உள்ளிட்ட பலரும் திரளாகக் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement