advertisement

கோவையில் கார் மோதி விபத்து - 4 இளைஞர்கள் பலி

அக். 25, 2025 4:13 முற்பகல் |

 

கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் நேற்று இரவு அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இந்த சமப்வத்தில் நண்பர்களான பிரகாஷ் (22), ஹரிஷ் (21), சபரி (21), அகத்தியன் (20) ஆகிய 4 இளைஞர்கள் உயிரிழந்தனர். பிரபாகரன் (19) என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று படுகாயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நண்பர்களான 5 பேரும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மதுபோதையில் காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.உயிரிழந்தவர்கள் 2 பேர் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள் ஆவர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement