தூத்துக்குடி மாநகராட்சியில் ஏராளமான சாதனைகளை செய்துள்ளோம் - மேயர் ஜெகன் பொியசாமி
தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆட்சியில் மாநகராட்சி பகுதியில் 3 ஆண்டுகளில் ஏராளமான சாதனைகளை செய்துள்ளோம் என மேயர் ஜெகன் பொியசாமி தகவல் தெரிவித்தார்.
தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆரம்பமாக போகும் புதிய வடிகால், சாலை, பூங்கா பணிகளை குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான கூட்டம் மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. அப்போது மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் பாராபட்சமின்றி அனைத்து துறை அதிகாாிகள் அலுவலர்கள் இணைந்து ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும். என்று கேட்டுக்கொண்டாா்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி இணை ஆணையர் சரவணக்குமாா், பொறியாளர் தமிழ்செல்வன், உதவி பொறியாளர் சரவணன். உதவி ஆணையர்கள் வெங்கட்ராமன் சுரேஷ்குமாா், கல்யாணசுந்தரம், பாலமுருகன், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி பொறியாளர்கள் இர்வின்ஜெபராஜ், காந்திமதி, முனீர்அகமது, ராமசந்திரன்,நகா்நல அலுவலர் சரோஜா, இளநிலை பொறியாளர்கள் செல்வம், பாண்டி, நிக்சன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகா், ராஜபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், நெடுமாறன், உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனா்.
பின்னர் மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் அரசு பொறுப்பேற்று 5 ஆண்டுகள் தொடங்கியுள்ள நிலையில் கடந்த 2008ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பின்பு பலர் பணியாற்றியுள்ளனா். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையாக எந்த பணிகளும் நடைபெறாத நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற பின் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தோ்தலில் மக்கள பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பணியாற்ற தொடங்கிய காலத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு விமா்சனங்கள் எழுப்பப்பட்டது. எனது பணி என்ன நான் என்ன செய்கிறேன் என்பதை சொல்ல மாட்டேன் செய்வேன் செயலில் பாருங்கள் என்று மாநகர மக்களுக்கு கூறினேன். சொன்னது போல பல்வேறு அதிரடி மாற்றங்களை செயல்களில் காட்டினேன். ஆனால் மேயராக இருந்தவர்களை பொதுமக்கள் சர்வ சாதாரணமாக சந்திக்க முடியாது ஆனால் என்னை பொதுமக்கள் எந்த நேரம் ஆனாலும் சந்திக்கலாம் நானும் சந்திப்பது மட்டுமின்றி தொலைபேசியில் தொடா்பு கொண்டு நிறைகுறைகளை பலர் சுட்டிக்காட்டுவதையும் குறிப்பெடுத்துக்கொண்டு பல இடங்களுக்கு நான் நோில் சென்று ஆய்வு செய்கிறேன். சில இடங்களுக்கு அதிகாாிகள் அலுவலா்கள் சென்று வந்து நிலவரம் குறித்து தொிவிப்பாா்கள் பின்னா் ஆனையருடன் கலந்து பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கையும் மேற்கொள்கிறேன்.
அதுபோல மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் தினசரி இரண்டு அல்லது மூன்று வார்டுகளில் நடக்கும் பணிகளை பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள மக்களை சந்தித்து வருகிறேன். இதுதான் திமுகவிற்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை உருவாக்கி தருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினா் இவரால் ஒன்றும் செய்ய முடியாது என்று இதுவரை இருந்தவர்கள் போல தான் இவரும் இருப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் நகா்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு ஆலோசனையின்படி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மேற்பார்வையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ேடன். இதனை தமிழக முதலமைச்சரே பாராட்டியுள்ளார். குறிப்பாக மாநகராட்சி பகுதியில் சிறிய ரோடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுமார் 20 வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்தது அந்த ஆக்கிரமிப்பை அகற்றியதின் மூலம் இன்று மக்கள் பயனடைந்து வருகின்றனர்
புது கிராமம் முதல் பெருமாள் தெரு, மேற்கு ரோடு 20 வருடமாக ஆக்கிரமிப்பில் இருந்தது ஆக்கிரமிப்பு அகற்றி ரோடு போடப்பட்டுள்ளது இதுபோல் மீனாட்சி புரம் நான்காவது தெரு சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி வழயில் எட்டையாபுரம் சாலைக்கும் செல்லும் வகையில் வழித்தடம் உருவாக்கி கொடுத்ததின் மூலம் பழைய பேருந்து நிலையம் வருபவா்க்கும் செல்பவர்களுக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இன்று சாலையாக உள்ளது. அதுபோல வெளி மாவட்டத்தில் இருந்து மாணவ மாணவிகள் வங்கி அரசு பணி உள்ளிட்ட பணிகளுக்கு படித்து வருகின்றனர் இதில் ஏழை எளிய மாணவ மாணவிகள் அதிக அளவில் படித்து வருகின்றனர் அவர்கள் படிப்பதற்கான புத்தகங்களை 2000 முதல் 10 ஆயிரம் வரை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலையில் மாணவ மாணவிகள் தவித்து வந்தனர் அதனை கருத்தில் கொண்டு வஉசி கல்லூரி முன்பு மாநகராட்சி படிப்பகம் அமைத்து கொடுத்தேன்,
அதன் மூலம் இரவு 11 மணி வரை அருகிலுள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்களும் படித்து பயன்பெறுகின்றனா். அதே போல் சிவந்தா குளம் மாநகராட்சி பள்ளி வளாகத்திற்குள் மாநகராட்சி படிப்பகம் அமைத்தேன். இந்த இரண்டு படிப்பகத்திலும் இன்டர்நெட் வசதி ஜெராக்ஸ் எடுக்கும் வசதி கணினி வசதி குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது இதனால் மாணவ மாணவியர் நல்ல முறையில் பயனடைந்து வருகின்றனர் இங்கு படித்த எத்தனையோ மாணவ மாணவிகள் வங்கி வேலைக்கும் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் உள்ளனர். இதனை தமிழக முதலமைச்சர் தூத்துக்குடிக்கு வந்தபோது நேரில் ஆய்வு செய்து மாநகராட்சி பணிகளை பாராட்டினாா்.
அதுபோல அரசு நிலம் தனியார் பள்ளிக்கு வழங்கப்பட்டிருந்தது குத்தகைக்கு குத்தகை காலம் முடிந்த பின்பு அந்த இடம் பல்வேறு பிரச்சனைகளில் இருந்தது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆலோசனையின் படி பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள இடத்தை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி பெரிய அளவில் விளையாட்டு மைதானத்தை அமைத்துள்ளேன். அதில் கிாிக்கெட் உள்ளிட்ட பல்ேவறு விளையாட்டுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அருகில் ஜெயராஜ் ரோட்டில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வரும் வகையில் சாலை அமைத்து கொடுத்ததின் மூலம் பொதுமக்கள் தற்போது சிரமமின்றி சீக்கிரமாக அந்தப் பாதையை பயன்படுத்தி பேருந்து நிலையம் வந்து கொண்டிருக்கின்றன. அதுபோல ஏழைகளின் எட்டாக்கனியாக இருந்த டப் விளையாட்டு மைதானம் தூத்துக்குடியில் தனியார் ஒருவர் தான் நடத்தி வந்தார் ஒரு மணி நேரத்துக்கு 2000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது ஏழை மக்கள் இந்த விளையாட்டை விளையாட வேண்டும் அதற்கான மைதானம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வஉசி கல்லூரி முன்பு மாநகராட்சி விளையாட்டு மைதானம் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க இலவசமாக பொதுமக்கள் விளையாடுவதற்கு நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது இன்னும் சில தினங்களில் இந்த மைதானம் மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது
தமிழகத்தின் தலைநகரம் சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் எத்தனை லட்சம் மக்கள் பொழுது போக்குகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு அது போல தூத்துக்குடியில் அமைக்க வேண்டும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் ஆலோசனை நடத்திய போது வ உ சி துறைமுகத்திற்கு சொந்தமான புதிய துறைமுகத்தில் உள்ள கடற்கரை பூங்காவை கனிமொழி எம்பி மூலம் மாநகராட்சி நிர்வாகத்திடம் அந்த இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது சுமார் பத்து கோடி மதிப்பில் பல்வேறு நவீன வசதியுடன் சென்னை மெரினா கடற்கரையை மிஞ்சும் வகையில் அனைத்து வசதிகளும் இருக்கக்கூடிய வகையில் அமைப்பதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு தற்போது அதற்கான பல்வேறு சிறப்பான பணிகளை செய்து வரும் இன்ஜினியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது அடுத்த ஆண்டு துவக்கத்திற்குள் பணிகள் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும் அதுபோல குறைந்த அளவு பூங்கா தான் தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்தது தற்போது நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் பல்வேறு வசதிகளுடன் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் மகளிர் பூங்கா ஜிம்முடன் தூத்துக்குடி மாநகராட்சியில் தான் அமைக்கப்பட்டுள்ளது
இது பெண்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று உள்ளது மேலும் இரண்டு மகளிர் பூங்கா நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது மாநகராட்சி பணிகளால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல இடங்களில் விளையாட்டு வசதியுடன் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது மூன்று ஆண்டுகளில் மக்கள் எதிர்பார்த்ததைவிட மாநகராட்சி சாா்பில் பல பணிககள் நிறைவேற்றி உள்ளோம். என்பது குறிப்பிடத்தக்கது மக்கள் மத்தியில் ஒரே ஒரு வருத்தம் தான் உள்ளது சாலைகள் போடப்படுகிறது சில மாதத்தில் குடிநீர் பைப்பு பதிப்பதற்காக சாலை உடைக்கப்படுகிறது அது மட்டும் தான் மக்கள் மத்தியில் மாநகராட்சி மீது ஒரு அதிருப்தி உள்ளது விரைவில் அதை சீர்செய்து விடுவோம் மக்கள் நன்மைக்காக தான் மற்ற அனைத்து செயல்களும் மாநகராட்சி மீது மக்கள் நல்ல எண்ணம் கொண்டதாகதான் உள்ளது இதுவரை இருந்த மாநகராட்சி மேயர்கள் எல்லாம் ஏன் இந்த பணியில் எல்லாம் செய்யவில்லை என்ற ஒரு கேள்வியும் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது
அடுத்த ஆண்டு 2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மாநகராட்சியில் சாா்பில் மக்களுக்கு என்ன செய்து உள்ளோம் என்று மக்களே சொல்லுவார்கள் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் மாநகராட்சிக்கு நல்ல பெயர் ஏற்பட்டுள்ளது. முதலில் எந்தநாளும் எப்போதும் என்னை சந்திக்கலாம். மேலும் மாநகராட்சியில் இன்னும் பல சாலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளது அந்த ஆக்கிரமிப்புகள் எல்லாம் அகற்றி சாலைகளை உருவாக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை மக்கள் மத்தியில் உள்ளது. ஏற்கனவே 75கோடி மதிப்பீல் பல ஏக்கா் இடங்கள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கப்படுகிறது. புதிய மின்விளக்குகள் அமைத்துள்ளோம். கடந்த காலத்தில் 2 பெருமழையை சந்தித்த போதும் மக்கள் பாதிக்காத வகையில் முழுமையாக மீட்பு பணியையும் மேற்கொண்டு மக்கள் பணியாற்றினோம். தொடா்ந்து மக்களுக்கான பணிகளை செய்வோம். இதற்கு அனைத்து தரப்பினரும் முழுமையான ஓத்துழைப்பு வழங்கி மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் துணை நிற்க வேண்டும். என்று கூறினாா்.
கருத்துக்கள்