advertisement

தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விபத்து

ஜூன் 04, 2025 7:32 முற்பகல் |

தூத்துக்குடியில் ஆபத்தான நிலையில் உள்ள புதிய பேரூந்து நிலைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, வேளாங்கன்னி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இக்கட்டிடம் சிதிலம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. 

இந்த நிலையில் நேற்று இரவு மதுரை பேருந்துகள் நிற்கும் பகுதியில்  மேற்கூரை உடைந்து விழுந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement