advertisement

சி.வ. அரசு பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மேயர் நடவடிக்கை

அக். 24, 2025 10:16 முற்பகல் |

சி.வ. அரசு பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுத்தனர்.

கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் பெய்த கனமழையின் காரணமாக சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளியில் மழை நீர் தேங்கியிருப்பதாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து பள்ளி வளாகத்தை நேரில் பார்வையிடுவதற்காக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் சி.வ. அரசு பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை பார்வையிட்டனர்.

 அங்கு மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டாரை 24 மணி நேரமும் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். அப்போதுதான் சில மணி நேரத்தில் பள்ளி வளாகத்தில் தேங்கி இருக்கும் மழைநீர் முழுவதும் அப்புறப்படுத்தப்படும் என்று அங்கு இருந்த அதிகாரிகளிடம் மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார். அதன் பின்பு பள்ளி முழுவதும் எங்கெல்லாம் மழை நீர் தேங்கியுள்ளது என்று பார்வையிட்டார். அப்போது பள்ளி வளாகத்தில் 1960 இல் உள்ள ஒரு கல்வெட்டு பார்க்கப்பட்டது. அதில் சி.வ. நகராட்சி பள்ளி என்று பொறிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பள்ளி தலைமையாசிரியர் இடம் பள்ளி தொடர்பான ஆவணங்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் கொடுங்கள் பள்ளியை மாநகராட்சி வரும் காலத்தில் ஆவணத்தின் அடிப்படையில் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்பு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சி.வ.பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி நகரின் மையப்பகுதியில் உள்ளது. பராமரிப்பு பணிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சில மணி நேரத்தில் தண்ணீர் முழுவது அப்புறப்படுத்தப்படும் இங்கு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் உள்ளது ஆவணங்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் ஏற்கனவே மாநகராட்சி சார்பில் 21 பள்ளிகள் உள்ளது சிவந்தா குளம் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றன என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

ஆய்வின் போது மாநகராட்சி பொறியாளர் தமிழ்ச்செல்வன், இளநிலை பொறியாளர் லெனின், தலைமையாசிரியர் பேரியல் ஞானமணி, கல்வி அதிகாரி கண்ணன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், வட்டச்செயலாளர் ரவீந்திரன், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட மாநகராட்சி அலுவலர்கள்  உடனிருந்தனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement